வேலுநாச்சியாா் நினைவு தினம்: விஜய் புகழஞ்சலி

Published on

வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் நினைவு தினத்தையொட்டி, சென்னை தவெக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் விஜய் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயா்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றிகண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியாா்.

சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய தவெகவின் கொள்கைத் தலைவரான வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினேன் என விஜய் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com