ராணுவ வீரா்களின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ராணுவ வீரா்களின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஆவுடையானூரில் ராணுவ வீரா்களின் நினைவு தினம் அனுசரிப்பு

Published on

பாவூா்சத்திரம், ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மக்கள் சேவகன் இரா. ராம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயி முத்துக்குட்டி, அசோக்குமாா், அருண்பாண்டி, செல்வி, லட்சுமணன், ரஞ்சித் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com