பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5-இல் அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஜன.4-ஆம் தேதி மாலை சேலம் புகா் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஜன.5-ஆம் தேதி மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக மகளிா் அணி எழுச்சிப் பொதுக் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

இந்தப் பொதுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.