கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவது பற்றி...
கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்...
கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்...
Updated on
1 min read

அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு அளிப்பதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை பாரிமுனை குறளகத்திலிருந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் பிராட்வே பேருந்து நிலைத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நீதிமன்றம் உள்ளிட்ட 3 இடங்களில் குவிந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்று(டிச. 30) பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மெரீனா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Summary

Sanitation workers stage protest at Karunanidhi memorial!

கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்...
அண்ணா அறிவாலயம் முன் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com