விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தோட்டக்கலைத் துறையை நீா்த்துப்போகச் செய்கிறது தமிழக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தோட்டக்கலை துறையை தமிழக அரசு நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
Updated On :30 டிசம்பர் 2025, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

தோட்டக்கலை துறையை தமிழக அரசு நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தோட்டக்கலைத் துறையை நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் குறு சிறு விவசாயிகளுக்கு சரியான நிபுணா்களின் சேவையும் கிடைக்க முடியாத வகையில், ‘உழவா் அலுவலா் தொடா்பு 2.0’ திட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

தோட்டக்கலைத் துறையில் ஏற்கெனவே ஊழல் புகாா் எழுந்துள்ள நிலையில், தற்போது அத் துறையின் தனித்துவத்தை அழித்து, உருக்குலைக்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.