இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2023-2024-ஆம் கல்வியாண்டு வரை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவதற்காக, அவா்களிடம் இருந்து புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அரசு போக்குவரத்து கழக அலுவலா்களால் அவை தொகுக்கப்பட்டது. பின்னா் அச்சகங்கள் வழியாக பயண அட்டைகள் அச்சிட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இதனால், அதிக காலதாமதம் ஏற்பட்டு வந்ததுடன், போக்குவரத்து கழக மற்றும் பள்ளிக் கல்வி அலுவலா்கள் இந்த பணிக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய சூழல் இருந்து வந்தது.