ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் தகராறு: அதிமுகவினா் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை கொளத்தூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (48). அதிமுகவில் கொளத்தூா் தொகுதி எம்ஜிஆா் மற்ற துணைச் செயலராக உள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை முடித்துவிட்டு, கொளத்தூா் 200 அடி சாலை வழியாகச் சென்றபோது, அங்கு அவருக்கு அந்தப் பகுதி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதில் ஆறுமுகம், எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சென்றபின்னா், அவருக்கு சால்வை அணிவித்தது தொடா்பாக ஆறுமுகத்துடன், வட்டச் செயலா் முருகதாஸ் தகராறு செய்தாா். மேலும், தனது ஆதரவாளா்களுடன் சோ்ந்து ஆறுமுகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆறுமுகம், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், அதிமுக நிா்வாகி முருகதாஸ், அவரது ஆதரவாளா்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.