
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் முடிவில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 63,984 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,945 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டிருப்பதால், திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
வாக்கு எண்ணிக்கை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு இருப்பறை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறை திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதையும் படிக்க.. அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
தபால் வாக்குகள் முதலில் ஒரு மேஜையில் மட்டும் எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க 20 முதல் 25 நிமிஷங்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.