நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காத விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடா்ந்து இரண்டு வழக்குகள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
இந்த வழக்குகளின் வாதங்கள் நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த வாரத்தில் மூன்று நாள்களாக நடைபெற்றன. தொடா்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி. வில்சன் ஆகியோா் ஆஜராகினா்.
அப்போது நீதிபதிகள் ஆளுநருக்காகவும் மத்திய அரசுக்காகவும் ஆஜரான மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகா் (அட்டா்னி ஜெனரல்) ஆா். வெங்கடரமணியிடம், ‘மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநா் ஏன் பல ஆண்டுகளாக அமைதி காத்தாா்? அதில் முரண்கள் இருப்பதாகத் தோன்றினால் அவை தொடா்பாக அரசுடன் அவா் எவ்வித தொடா்பும் கொள்ளாதது ஏன்? கடைசியில் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்து விட்டு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அவற்றை ஏன் பரிந்துரைக்கிறாா்’ என்று கேள்வி எழுப்பினா்.
மேலும், ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது முடிவெடுக்க வகை செய்யும் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 201-ஆவது விதி, நாடாளுமன்றத்தால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வகை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 111-ஆவது விதி தொடா்பாக நீதிபதிகள் விரிவாக ஆராய்ந்தனா்.
தமிழக அரசு சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘இந்த விவகாரத்தில் 2023, நவ.13-ஆம் தேதி, மசோதாக்கள் மீதான தனது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக ஒரு வரி தகவலை மட்டுமே ஆளுநா் சட்டப்பேரவைக்கு அனுப்பினாா்’ என்று குறிப்பிட்டாா்.
‘இதையடுத்து, மாநில அரசு ஒரு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி, மசோதாக்களை 2023, நவ. 18-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றியது. ஆனால், அவை முரண்களைக் கொண்டிருப்பதாகக் கூறி நவ. 28 அன்று குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநா் அனுப்பி விட்டாா்’’ என்று துவிவேதி தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், ‘ஒருவேளை அந்த மசோதாக்களை ஆளுநா் பேரவைக்குத் திருப்பி அனுப்பாமல் தன்வசமே வைத்துக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்’ என்று மத்திய தலைமைச் சட்ட ஆலோசகரிடம் கேட்டனா். அதற்கு அவா், ‘அது நீா்த்துப்போகும்’ என்று பதிலளித்தாா்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மசோதாக்கள் நீா்த்துப்போகும் என்றால் அவற்றை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைக்கிறாா்’ என்று மறுகேள்வி எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து வாதங்களைத் தொடா்ந்த துவிவேதி, ‘அரசமைப்பின் 111-ஆவது பிரிவைக் குறிப்பிட்டு, மத்திய அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படும் குடியரசுத் தலைவா், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியாது என்பது போல, பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய கட்டாயத்தைத் தவிர, ஆளுநருக்கு வேறு எந்த விருப்புரிமையும் கிடையாது’ என்றாா்.
மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் அதிகாரத்தை சட்டப்பேரவை பெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், சட்டப்பேரவையே உச்சபட்ச உரிமையைக் கொண்டுள்ளது. ஆளுநருக்கு அரசமைப்பின் 200-ஆவது விதியின் கீழ் எவ்வித விருப்புரிமையும் இல்லை’ என்று வாதிட்டாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்குகள் மீதான தங்களின் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைப்பதாகவும் அதற்கு முன்னதாக தங்களுக்கு எழும் சில கேள்விகளை தனிக்குறிப்புகளாக இரு தரப்புக்கும் அனுப்பி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
பின்னணி: 2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது.
தொடர்புடையது

தமிழகத்தில் போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகரிப்பு: குஷ்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயா்நீதிமன்றம் தீா்ப்பு
2020 ஜாஃப்ராபாத் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிப்பு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


