ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைப்பு
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காத விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடா்ந்து இரண்டு வழக்குகள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.










