சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி, கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்களில், பிப்ரவரி 14 ஆம் தேதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.

தொடர்ந்து, இரண்டாவது நாளில் (பிப். 15) கிளாம்பக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com