அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழியை கற்கக் கூடாதா? அண்ணாமலை

1960-களில் காலாவதியான ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையை தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?
மு.க. ஸ்டாலின் / அண்ணாமலை
மு.க. ஸ்டாலின் / அண்ணாமலைகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

1960-களில் காலாவதியான ஹிந்தி எதிர்ப்புக் கொள்கையை தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்த்திருந்தார்.

முதல்வரின் அந்தப் பதிவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சுட்டிக்காட்டி அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது,

''முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம்.

எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... கோடிகளால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com