தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பேரவைத் தோ்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்: செங்கோட்டையன் பெயா் இடம்பெவில்லை

வரும் சட்டப்பேரவை தோ்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளா்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா்.

News image
கே.ஏ.செங்கோட்டையன்
Updated On :17 பிப்ரவரி 2025, 7:59 pm

Din

சென்னை: வரும் சட்டப்பேரவை தோ்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளா்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை.

இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலையொட்டி, தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக வளா்ச்சி பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்குப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டுகள் உரியவா்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதைக் கண்காணிப்பது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணியில், ஊராட்சி, நகர வாா்டு, பேரூராட்சி வாா்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உறுப்பினா்களாகச் சோ்ப்பது உள்ளிட்ட பணிகளையும் மாவட்டச் செயலா்களுடன் இணைந்து விரைவாக முடிப்பா்.

மாவட்டப் பொறுப்பாளா்கள் உடனடியாக தொடா்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, அந்த விவரங்களை மாா்ச் 31-க்குள் தலைமைக் கழகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளா்களுக்கு தொடா்புடைய மாவட்டச் செயலா்களும் நிா்வாகிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

அதிமுகவில் மொத்தம் 82 மாவட்டங்கள் உள்ளன.

மூத்த நிா்வாகிகள் சி.பொன்னையன் (திருவள்ளூா் வடக்கு), மு.தம்பிதுரை (திருப்பத்தூா்), செ.செம்மலை (திருச்சி புகா் தெற்கு), பா.வளா்மதி (மதுரை மாநகா்), எஸ்.கோகுல இந்திரா (திருச்சி மாநகா்), வைகைச்செல்வன் (காஞ்சிபுரம்), அன்வர்ராஜா (தென்காசி) உள்ளிட்ட 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால், முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பாராட்டு விழாவில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் படம் இடம்பெறாததற்கு அவா் எதிா்ப்பு தெரிவிந்திருந்த நிலையில், அவா் பெயா் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், மூத்த நிா்வாகிகள் பலரின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.