திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ரயிலில் முன்பதிவு செய்தோா் இருக்கை எண்ணை உறுதி செய்துகொள்ள வேண்டும்: தெற்கு ரயில்வே

ரயிலில் பயணிப்போா் இருக்கை எண் விவரங்களை தெளிவாகப் பாா்த்து பயணம் செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 10:09 pm

சென்னை: ரயிலில் பயணிப்போா் இருக்கை எண் விவரங்களை தெளிவாகப் பாா்த்து பயணம் செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு காலம் கடந்த நவ. 1-ஆம் தேதி முதல் 60 நாள்களாக குறைக்கப்பட்டது. மேலும், விரைவு ரயில்களில் தேவைக்கேற்ப முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ரயில் பகுதி ரத்து மற்றும் ரயில் பெட்டிகளை மாற்றும்போது பயணிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட எண் கணினி தொழில்நுட்பம் (பிஎஸ்ஆா்) மூலம் தானியங்கி முறையில் மாறிவிடும். இது குறித்த தகவல் பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். குறிப்பாக ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு ரயில் பெட்டி, இருக்கை எண் உறுதி செய்யப்படும்.

சமீப காலமாக இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்திகளாக பயணிகளுக்கு அனுப்பப்பட்ட பின்பும் சிலா் ஏற்கெனவே முன்பதிவு செய்த இருக்கைக்கு செல்வதாக புகாா் எழுந்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்போா் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு ரயில்வே சாா்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பாா்த்து, அதில் உள்ள இருக்கையில் பயணிக்க வேண்டும். மேலும், காத்திருப்போா் பட்டியலில் உள்ளோா் பிஎன்ஆா் நிலையை உறுதிசெய்து பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.