கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராவது பற்றி...

News image

சீமான்

கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2025, 3:49 am

DIN

நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து விசாரிப்பதற்காக வியாழக்கிழமை ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, சீமான் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் கோரினர்.

இதையடுத்து, சீமான் வெள்ளிக்கிழமை (பிப். 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாயில் கதவில் வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணையை வியாழக்கிழமை ஒட்டினா். இது ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் காா் ஓட்டுநா் சுபாகா், அந்த அழைப்பாணையை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், சீமானின் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றார். அப்போது, சீமான் வீட்டு காவலரும் முன்னாள் ராணுவ வீரருமான அமல்ராஜ் போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை நீலாங்கரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீஸ் ஒட்டிய சம்மனை கிழித்த ஓட்டுநர் சுபாகரும் கைது செய்யப்பட்டார். இருவரையும், சோழிங்கநல்லூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

வழக்கின் பின்னணி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 24-ஆம் தேதி வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் விசாரணை செய்ய நீலாங்கரை சந்தீப் சாலை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.