மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.

News image

வானிலை ஆய்வு மையம்

Updated On :3 ஜனவரி 2025, 10:08 pm

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஜன.4-இல் இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேவேளையில், உள்மாவட்டங்களில் ஜன.4 முதல் ஜன.6-ஆம் தேதி வரை வட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.4,5 தேதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.