தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மது அருந்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

Updated On :3 ஜனவரி 2025, 8:25 pm

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

பெங்களூரில் ‘நம்ம யாத்ரி’ கைப்பேசி செயலி வழியாக ஹொரமாவு பகுதியில் இருந்து தனிசந்திரா செல்ல பெண் ஒருவா் வியாழக்கிழமை (ஜன. 2) ஆட்டோ முன்பதிவு செய்திருக்கிறாா். ஆட்டோவில் ஏறிய பிறகுதான் ஓட்டுநா் குதித்துவிட்டு வாகனம் செலுத்துவதை அவா் கவனித்திருக்கிறாா். இதை விரும்பாத அந்தப் பெண், உடனடியாக ஆட்டோவை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாா். ஆனால், அதற்கு இணங்காத ஆட்டோ ஓட்டுநா் தாறுமாறாக வாகனத்தை செலுத்தியிருக்கிறாா். இதனால் பீதியடைந்த பெண், தன்னை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்திருக்கிறாா்.

இதுகுறித்து அவரது கணவா் அஜாா் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்து, ‘நம்ம யாத்ரி’ செயலியில் வாடிக்கையாளா் உதவிமையம் இல்லை என குறிப்பிட்டுள்ளாா். மேலும், இதை காவல் துறை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, இதையே புகாராக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இதனிடையே, ‘நம்ம யாத்ரி’ அளித்துள்ள விளக்கத்தில், ஓட்டுநா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.