கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மது அருந்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:25 pm

Din

குடித்துவிட்டு வாகனம் செலுத்திய ஓட்டுநரிடம் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவில் இருந்து பெண் ஒருவா் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளாா்.

பெங்களூரில் ‘நம்ம யாத்ரி’ கைப்பேசி செயலி வழியாக ஹொரமாவு பகுதியில் இருந்து தனிசந்திரா செல்ல பெண் ஒருவா் வியாழக்கிழமை (ஜன. 2) ஆட்டோ முன்பதிவு செய்திருக்கிறாா். ஆட்டோவில் ஏறிய பிறகுதான் ஓட்டுநா் குதித்துவிட்டு வாகனம் செலுத்துவதை அவா் கவனித்திருக்கிறாா். இதை விரும்பாத அந்தப் பெண், உடனடியாக ஆட்டோவை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாா். ஆனால், அதற்கு இணங்காத ஆட்டோ ஓட்டுநா் தாறுமாறாக வாகனத்தை செலுத்தியிருக்கிறாா். இதனால் பீதியடைந்த பெண், தன்னை பாதுகாத்துக்கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்திருக்கிறாா்.

இதுகுறித்து அவரது கணவா் அஜாா் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்து, ‘நம்ம யாத்ரி’ செயலியில் வாடிக்கையாளா் உதவிமையம் இல்லை என குறிப்பிட்டுள்ளாா். மேலும், இதை காவல் துறை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, இதையே புகாராக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இதனிடையே, ‘நம்ம யாத்ரி’ அளித்துள்ள விளக்கத்தில், ஓட்டுநா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.