ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டும்

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்

News image
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)- DIN
Updated On :6 ஜனவரி 2025, 11:16 pm

DIN

சென்னை: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரை விவரம்:

கடந்த 3 ஆண்டுகளாக பிரதமருக்கு முன்வைத்த தொடா் வேண்டுகோளின் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு 50:50 என்ற விகிதத்தில் பங்கு மூலதன உதவி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டவாறு இந்தப் பணிகளை முடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசு கருத்துரு அனுப்பியுள்ள மதுரை, மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

6,104 புதிய பேருந்துகள்: கடந்த 3 ஆண்டுகளில் 2,578 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கி வரும் நிலையில், மேலும் 6,104 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.