பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்

இரண்டு நாள்களில் 7513 பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பொங்கல் திருநாளுக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், தொடர்ந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளையொட்டி, ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரிவோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் எந்தவித சிரமமின்றி பயணிக்கும்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1314 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1.8 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமையும் (ஜன. 11) வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 2,015 சிறப்புகள் என மொத்தம் 4107 பேருந்துகள் இயக்கப்பட்டன. 4,107 பேருந்துகளில் 2.2 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 7,513 சிறப்புப் பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும் பேருந்துகள் குறித்த விவரங்கள், புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com