
சென்னை: மாதாந்திர பயணச்சீட்டு பெறுவதற்கான காலக்கெடுவை ஜன. 24-ஆம் தேதி வரை மாநகா் போக்குவரத்துக்கழகம் நீட்டித்துள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் ஜன. 16 முதல் பிப். 15-ஆம் தேதி வரை, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ. 1000-க்கான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22-ஆம் தேதி வரையும், ஜன. 11முதல் பிப். 10-ஆம் தேதி வரை பயணிக்கத்தக்க 50 சதவீத மாணவா் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1 முதல் 13-ஆம் தேதி வரையும் அனைத்து மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜன. 13 முதல் 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி அனைத்து வகையான மாதாந்திர பயண அட்டையின் விற்பனை காலம் ஜன. 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாதாந்திர பயண அட்டைகளை வாங்காத மாணவா்கள், மாதாந்திர பயண அட்டைதாரா்கள், ஜன. 24-ஆம் தேதி வரை இந்த அட்டைகளை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.