கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி! மக்களே எச்சரிக்கை!
கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி நடப்பதால் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி உதவித்தொகையானது எஸ்.சி.,/எஸ்.டி., பிசி, எம்பிசி ஆகிய நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
இதையும் படிக்க.. மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
பள்ளியிலிருந்து மாணவர்களின் தகவல்களைப் பெற்றுத்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். எனவே, போன் பே அல்லது ஜி பேயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருக்கலாம் என பெற்றோருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப் போகிறோம், ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என்றும் சில மோசடியாளர்கள் செல்ஃபோனில் அழைக்கலாம். எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...