

சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் திங்கள்கிழமை காலை நெய்வாசல் கிராமம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.