புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வன்னியா்களுக்கான 10.5% ஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்

News image

பாமக நிறுவனா் ராமதாஸ்

Center-Center-Chennai

Updated On :27 ஜனவரி 2025, 10:05 pm

Din

சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தின்போது காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்னிய மக்களுக்கு துரோகத்தை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதை சமூகநீதி தியாகிகள் ஏற்க மாட்டாா்கள்.

சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான அறிவிப்பை விழுப்புரத்தில் தியாகிகளின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வா் வெளியிட வேண்டும்.

வன்னியா் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோா் ஆணைய பரிந்துரை அறிக்கையை பெற்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதுதொடா்பான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.