மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்.
முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்ற 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்றிரவு காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மற்றும் தமிழக மீனவர்கள் 7 பேர் என 13 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com