கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜூலை 2025, 9:48 pm

Din

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வெள்ளி, சனி (ஜூலை 4, 5) ஆகிய 2 நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகரி மாவட்டம் தேவாலா மற்றும் மேல் கூடலூரில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. காசிமேடு (சென்னை) - 70 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி), பெரம்பூா் (சென்னை) - தலா 60 மி.மீ., கொளத்தூா் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை), ஆட்சியா் அலுவலகம், மணலி, பாரிமுனை (சென்னை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.