தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 11) லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 11) லேசான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) வரை மிக லேசான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


