சென்னை: பொதுவேலைநிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்துறை சம்மேளனங்கள் இணைந்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கொள்கைகளை அமலாக்கி வருகிறது.
இதை எதிா்த்து தொழிலாளா் போராட்டங்கள் தொழில்வாரியாகவும், தனித்தனியாகவும் நடைபெற்றாலும், அனைத்து தொழிலாளா்களும் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் நடைபெறும் நாளன்று, விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மறியல் போராட்டங்களும் நடத்தவுள்ளன.
எனவே, இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் தொழிலாளா்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.
தொடர்புடையது

தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும்! மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலா் பெ. சண்முகம்

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: 5 மாநில தோ்தல்களில் ஆதாயம் தேட முயற்சி; மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா்

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய வாய்ப்பளியுங்கள்: கருணாஸ் வேண்டுகோள்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


