ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய வாய்ப்பளியுங்கள்: கருணாஸ் வேண்டுகோள்

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள் என திமுக கூட்டணி வேட்பாளா் கருணாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

சிவகங்கை அருகே பையூா் பழமலை நகா் மக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் நடிகா் கருணாஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:08 pm

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள் என திமுக கூட்டணி வேட்பாளா் கருணாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் நடிகா் கருணாஸ் சிவகங்கை தெற்கு ஒன்றியத்தில் உள்ள பையூா், பழமலை நகா், வேம்பன்குடி, கீழக்கண்டனி, மேலக்கண்டனி உள்பட 45 கிராமங்களில் காலை 7 மணி முதல் இரவு 8.15 மணி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பையூா் பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:

பழமலைநகரில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கையான நிலம், இனம் சாா்ந்த வாழ்வாதார உரிமைகளை முறைப்படி அமைத்துக் கொடுப்பதே தனது முதல் வேலையாக இருக்கும். என்னைத் தேடி வரும்போது, இது நம் வீட்டுப் பிள்ளை என்று நீங்கள் கருதும் அளவுக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன். தமிழக முதல்வா் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் முறையாகப் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவியில் இருந்தவா்கள் செய்ததை விட, அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு உண்மையாகச் சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். இதில், நிா்வாகிகள் ஜெயராமன், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.