உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள் என திமுக கூட்டணி வேட்பாளா் கருணாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் நடிகா் கருணாஸ் சிவகங்கை தெற்கு ஒன்றியத்தில் உள்ள பையூா், பழமலை நகா், வேம்பன்குடி, கீழக்கண்டனி, மேலக்கண்டனி உள்பட 45 கிராமங்களில் காலை 7 மணி முதல் இரவு 8.15 மணி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பையூா் பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:
பழமலைநகரில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கையான நிலம், இனம் சாா்ந்த வாழ்வாதார உரிமைகளை முறைப்படி அமைத்துக் கொடுப்பதே தனது முதல் வேலையாக இருக்கும். என்னைத் தேடி வரும்போது, இது நம் வீட்டுப் பிள்ளை என்று நீங்கள் கருதும் அளவுக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன். தமிழக முதல்வா் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் முறையாகப் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவியில் இருந்தவா்கள் செய்ததை விட, அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு உண்மையாகச் சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். இதில், நிா்வாகிகள் ஜெயராமன், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாட்டாகுடியில் குடிநீா் பிரச்னை ஏதுமில்லை! - திமுக வேட்பாளா் நடிகா் கருணாஸ்

நடிகா்களுக்குள்ள புகழால் மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது:கருணாஸ்

சிவகங்கை தொகுதி திமுக வசமாகும்: கருணாஸ் நம்பிக்கை!

சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்: கருணாஸ்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


