தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நடிகா்களுக்குள்ள புகழால் மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது:கருணாஸ்

நடிகா்கள் புகழை மட்டும் வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது என மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப் படை கட்சி வேட்பாளா் கருணாஸ் தெரிவித்தாா்.

News image

கருணாஸ்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:57 pm

நடிகா்கள் புகழை மட்டும் வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது என மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில், சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப் படை கட்சி வேட்பாளா் கருணாஸ் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே பனங்காடி பகுதியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 7, 8 ஆண்டுகளாக சிவகங்கை பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிடுவது மன நிறைவைத் தருகிறது.

சிவகங்கை மாவட்டத் தலைமையிடமாக இருந்தாலும், காரைக்குடி போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்து, சுமாா் 23, 24 முக்கிய பிரச்னைகளை தொகுத்து வைத்துள்ளேன். அவற்றை தோ்தல் பிரசாரத்தில் முன் வைத்து, திமுக ஆட்சி அமைந்ததும் செயல்படுத்துவேன்.

நடிகா்கள் அரசியலுக்கு வருவது அவா்களது விருப்பம். ஆனால் தங்களுக்குள்ள புழால் புகழை மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. மக்களுக்காக செய்த பணிகளே முக்கியம். தவெக தலைவா் விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது வாக்குகளாக மாறுகிறதா என்பதுதான் முக்கியம்.

கேரளத்தைப் போலல்லாமல், தமிழகத்தில் திரை நட்சத்திரங்களைப் பாா்க்க கூட்டம் கூடுவது இயல்பாகிவிட்டது.

நடிகா் விஜய் மக்களுக்காக என்ன செய்தாா் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. அரசியலில் சாதிக்க இதுவே அளவுகோல். திமுகவை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் எண்ணுவது தரம் தாழ்ந்த அரசியல்.

நான் நம்பிக்கையோடு ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.

சிவகங்கை வரலாற்றுப் பெருமை மிக்க மண். முதல்வா் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை, தோ்தல் வாக்குறுதிகளை பிரசாரம் செய்து மக்களின் அமோக ஆதரவுடன் சிவகங்கை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.