புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2025, 11:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 1ஆம் தேதி எல்லைத் தாண்டியதாக சிறைபிடித்தது.

அத்துடன் மீனவர்களின் விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறைக்காவல் முடிந்த பின் 7 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து மீனவர்கள் 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்ற கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Summary

The Mannar court has extended the jail term of 7 Rameswaram fishermen until the 17th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.