25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை- சென்னை காவல் ஆணையர்

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.

News image
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். - கோப்புப்படம்.
Updated On :12 ஜூலை 2025, 12:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.

சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. அனைத்துப் போராட்டங்களுக்கு பின்பற்றப்படும் விதிகளே தவெக போராட்டத்திற்கும் பொருந்தும்.

தவெகவினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை.

அனுமதி கிடைக்காது என நினைத்து அவர்களாகவே நீதிமன்றம் சென்றுள்ளனர். நவீன் ரூ.44 கோடி கையாடல் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்யும்போது மனம் மாறாமல் இருக்க கைகளை பின்னால் கட்டியுள்ளார்.

இதுவரை அறிவியல் பூர்வமாக நடந்த விசாரணையில் தற்கொலை போலத்தான் தெரிகிறது.

ரூ.40 கோடி கையாடல் வழக்கை கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து இருக்கக்கூடாது. திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனியை விசாரித்ததாகவும் தகவல் இல்லை. புகார் கொடுத்த உடனே எப்ஐஆர் போட முடியாது.

முகாந்திரம் இருந்தால் மட்டுமே நிதிமன்றம் எப்ஐஆர் போட வேண்டும் என கூறியுள்ளது என்றார்.

summary

Chennai Police Commissioner Arun has clarified that permission for tvk protest has not been denied.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.