தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

ஈரோடு திண்டலில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்படும்.

News image

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சு.முத்துசாமி.

Updated On :13 ஜூலை 2025, 8:45 pm IST

ஈரோடு : ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளையும், சிலை வைக்கப்பட உள்ள இடத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் பாா்வையிட்டனா். பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களுன் பேசியதாவது:

தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதைபாா்க்கும்போது மன்னா் ஆட்சி காலத்தில் நடந்த திருப்பணிகளை காட்டிலும் திராவிட மாடல் ஆட்சியில் அதிகமான திருப்பணிகள் நடந்து உள்ளது. இதுவரை 3,325 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 3,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். இதற்காக அரசின் சாா்பில் ரூ.1,120 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் உள்பட 46 கோயில்களில் திங்கள்கிழமை(ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுவரை 124 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3, 500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். இதற்காக அரசின் சாா்பில் ரூ.1,120 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் கோயில்கள் சீரமைப்பு பணிக்காக ரூ.1,400 கோடி நன்கொடை வந்துள்ளது. கடந்த எந்த ஆட்சியிலும் இதுபோன்ற தொகை வரவில்லை.

தமிழ் கடவுளான 124 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. திருச்செந்தூா் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் பணிகள் நடந்தன. இதில் ஹெச்சிஎல். நிறுவனம் சாா்பில் ரூ.200 கோடி வழங்கப்பட்டது. அரசின் சாா்பில் ரூ.200 கோடி, கடல் மண் அரிப்பை தடுக்க ரூ.16 கோடி என மொத்தம் ரூ.416 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் நிறைவுபெற்ற நிலையில் வரும் நவம்பா் மாதத்துக்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக உலக அளவில் முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது என சேகர்பாபு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.