காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர்.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34), நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கருவுற்று இருந்த நிலையில், மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியில் சென்று தப்பித்து விட்டனர். குளியலறையில் இருந்தவர்கள் விபரம் அறியாது, அதை விட்டு வெளியில் வரும் போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காது பலியாகினர்.
சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணித் தாயும், அவரது மகளும் உயிரிழந்தது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!
Summary
A pregnant woman and her daughter, who were caught in a fire caused by a cooking gas leak at their home in the Pillayarpalayam area of Kanchipuram, died on Monday without any treatment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: கேட்டரிங் சங்க நிா்வாகிகள் கோரிக்கை

பட்டுக்கோட்டை அருகே டிப்பா் லாரி - தனியாா் ஆம்புலன்ஸ் மோதல்; தாயும், மகளும் உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


