சென்னை: 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 17, 18-ஆம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை:
டிட்டோஜாக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில உயா்நிலைக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் பதவி உயா்வு தொடா்பான அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
முதல்வா் ஸ்டாலின் டிட்டோஜேக் நிா்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீா்வுகாண முன்வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘மாணவா் சோ்க்கையை அதிகமாக்க வேண்டும்’

மாணவா்களுக்கு மனிதாபிமானத்தை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும்

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


