கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டு் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
அப்போது, அங்கு வந்த 7 பேர், மாணவியுடன் இருந்த மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றனர்.
இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல், பிரகாஷ், காா்த்திகேயன், நாராயண மூா்த்தி, மணிகண்டன், பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணிகண்டன் ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் அளித்த தீர்ப்பில், கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்றும், குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியும் இன்று (ஜூலை 18) உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!
Summary
The Coimbatore POCSO court has sentenced seven people to life imprisonment in the case of the gang rape of a student in Coimbatore in 2019.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

தவெக நிா்வாகிகளால் மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாா்

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 பேருக்கு ஆயுள்
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



