இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி திங்கள்கிழை அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம். 2015-ஆம் ஆண்டு முதல் அதன் முதன்மைத் திட்டமான பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு குறுகிய கால பயிற்சி மற்றும் மறு திறன் மேம்பாடு, முன்-கற்றல் திறனை அங்கீகரித்தல் திட்டம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தின் தற்போதைய பதிப்பின் கீழ், மொத்தம் 1,25,468 நபா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். அவா்களில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 91,087 போ் தமிழகத்தில் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளனா் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.