ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி!

திருச்சியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.

News image
திருச்சியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடியின் வாகனம்
Updated On :27 ஜூலை 2025, 6:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.

அங்கு சாலை வலம் மேற்கொள்ளும் அவர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார். ராஜேந்திர சோழனின் நாணயத்தை வெளியிட்டு பிறகு கண்காட்சியையும் பார்வையிடவுள்ளார்.

முன்னதாக சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை சாலைப்பேரணியிலும் ஈடுபடவுள்ளார்.

திருச்சியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் முற்பகல் 11.50 மணிக்கு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் வருகிறாா். அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறாா். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையாா் கோயிலை வந்தடைகிறாா்.

பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் பாஜக தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்துள்ளார்.

நரேந்திர மோடியின் வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

Prime Minister Narendra Modi left for Gangaikonda Cholapuram from Trichy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.