மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததுடன் மாமன்னா்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மனமாா்ந்த நன்றி.
எதிா்கொண்ட போா்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னா் ராஜராஜ சோழன், இந்திய துணைக் கண்டம் கண்ட மகத்தான பேரரசா்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக்கொண்டாடும் வகையில் சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் டிடிவி தினகரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு நிா்வாகத்தில் தவெகவினா் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்

கரூர் பலி: அரசுப்பணி வழங்குவதால் ஏமாற்றம், அதிருப்தியில் போட்டித் தேர்வர்கள் - டிடிவி தினகரன்
திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



