5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) முதல் ஆக. 3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு மற்றும் நடுவட்டம் (நீலகிரி) -தலா 40 மி.மீ. மழையும், சோலையாறு (கோவை) - 30 மி.மீ. மழையும் பதிவானது.

வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும், மதுரை நகரம் - 102.92, நாகப்பட்டினம் - 101.66, தஞ்சை - 100.4, ஈரோடு - 100.04 என மொத்தம் 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com