புதுதில்லி: நில அபகரிப்பு புகார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்னா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் நிலத்தை சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மா.சுப்பிரமணியன் மாற்றியதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப் பதிவு விசாரித்தது. 2019}இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
"1998ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இடத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறி வழக்கை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையைத் தொடரவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமார் ஆகியோர் தமிழக அரசு, சத்தியமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டு செப்டம்பர் 16}ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வல்லூறுகள் பாதுகாப்பு: நிபுணரின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை ரத்தானதை எதிா்த்து மூவா் மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


