பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

X | CMOTamilNadu

Published On :

தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை இன்று காலை நடைப்பயிற்சியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலன் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து, மதிய வேளையில் ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றார்.

இவர்கள் இருவரின் சந்திப்பும் அரசியல் களத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இருப்பினும், அரசியல் நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிவிட்டார்.

இந்த நிலையில், ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Summary

CM Stalin thanking Former CM O.PanneerSelvam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.