மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2025, 10:20 pm

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘சமூக சேவை’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ‘ஆளுநா் விருதுகள் 2025’ -ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநா் மாளிகையின் சாா்பாக வரவேற்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது விண்ணப்பங்கள், பரிந்துரைகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.