இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

பாஜக கூட்டணியிலிருந்து விலகினார் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்.

News image
ஓபிஎஸ்- கோப்புப்படம்
Updated On :31 ஜூலை 2025, 8:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காதது, அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பதில் ஆகியவற்றால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியில் இருந்தார்.

மேலும், தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னா் தனக்கு நெருக்கமான ஆதரவாளா்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இன்று(ஜூலை 31), காலை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுகிறது.

பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்று நாடே அறியும். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் ஓபிஎஸ் சந்திப்பார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடான சந்திப்பு குறித்து பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது” என்றார்.

summary

Former Minister Panrutty Ramachandran has announced that former Chief Minister O. Panneerselvam will withdraw from the BJP alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.