தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிட்டதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகி ராஜேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

ஸ்ரீ பெரும்புதூரில் தவெக அன்னதானம்

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



