பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

உத்தமபாளையத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகர் செல்லப்பாண்டியும், உடன் சென்ற அவரது தோழியும் பலி

பலி - பிரதிப் படம்

Published On :

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர்.

சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இவரும் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த தோழி வைத்தீஸ்வரி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையை கடந்து செல்ல முயன்றபோது, கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இது பலத்த காயமடைந்த தோழி வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திமுக பிரமுகர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Summary

DMK leader and his friend killed in collision with private omni bus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.