தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

உத்தமபாளையத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகர் செல்லப்பாண்டியும், உடன் சென்ற அவரது தோழியும் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 8:28 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர்.

சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இவரும் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த தோழி வைத்தீஸ்வரி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையை கடந்து செல்ல முயன்றபோது, கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இது பலத்த காயமடைந்த தோழி வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திமுக பிரமுகர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Summary

DMK leader and his friend killed in collision with private omni bus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.