லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையில் சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பெண் புகார்

News image
- ENS
Updated On :15 ஜூன் 2025, 4:31 am

DIN

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் திவ்யா (35) என்ற பெண், அவரது தந்தை சர்குணனின் வளர்ப்பு தாயார் பழனியம்மாளுக்கு சொந்தமாக செல்வபுரம், குமாரபாளையம் கிராமத்தில் உள்ள 36 சென்ட் நிலம், உயில் சாசனம் மூலம் தந்தைக்கு வந்ததாகவும், கடந்த பல வருடங்களாக சொத்தை தந்தையின் குடும்பத்தினர் அனுபவித்து வருவதாகவும், புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலத்தை அபகரிக்க தீபா விஸ்வநாதன், ஈஸ்வரி, ரேணுகா, ராணி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும், கடந்த ஏப்ரல் 15 ம் தேதி, ஜேசிபி, டிராக்டர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும் அவரை ஜேசிபியால் மோதுவோம் என மிரட்டியதாகவும், 30 வயதுடைய நான்கு ஆண்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல் துறைக்கு தகவல் அளித்த பின்பும் அவர்கள் இடத்தை விட்டு செல்லவில்லை என திவ்யா தெரிவித்து உள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மீண்டும் அவர்கள் அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையரிடம் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், தீபா விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை விடுத்து உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.