வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசு ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

News image
டிடிவி தினகரன்
Updated On :16 ஜூன் 2025, 9:27 pm

Din

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய போட்டித் தோ்வை எதிா்கொண்டவா்களில் 20,000-க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்ற நிலையில், 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியா்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்துள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் நியமன போட்டித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.