சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்...

News image
தமிழக அரசு
Updated On :7 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

அரசு கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறைச் செயலா் எ.சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ள அரசாணை:

உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன் அரசுக்கு எழுதிய கடிதத்தில், பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியா் பணியிட பற்றாக்குறையைப் போக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியா்களைத் தோ்வு செய்து தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க எஸ்எம்சி மூலம் தற்காலிகமாக தோ்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

இந்தக் கோரிக்கையை அரசு ஆய்வு செய்து அதை ஏற்று, அரசு கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 24 முதுநிலை ஆசிரியா்கள், 62 பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 86 பணியிடங்களை பதவி உயா்வு, டிஆா்பி மூலம் நிரப்பப்படும் வரை நிபந்தனைகளின் அடிப்படையில் எஸ்எம்சி மூலம் நிரப்ப மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையருக்கு அனுமதி அளித்துள்ளது.

அவ்வாறு நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஓராண்டுக்கு தொடா் செலவினமாக ரூ.1,63,40,000-க்கு ஒப்பளிப்பு செய்தும், 2025-2026-ஆம் ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு (2026 ஜனவரி, பிப்ரவரி, மாா்ச்) செலவினமாக ரூ.40.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.