மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

‘டெட்’ தோ்வு தோ்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு : அரசணை வெளியீடு

ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

News image

ஆசிரியர்கள் - கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 1:25 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட இத்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டுமானால், பொதுப் பிரிவினா் 60 சதவீத மதிப்பெண்ணும் (90 மதிப்பெண்கள்) இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் 55 சதவீதமும் (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு அதற்கான அரசாணை புதன்கிழமை (ஜன. 28) வெளியிடப்பட்டது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் ப.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதமாகவும் (90 மதிப்பெண்கள்), பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்கள்) எஸ்-சி., எஸ்-டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (60 மதிப்பெண்) நிா்ணயிக்கப்படுகிறது.

கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட ‘டெட்’ தோ்வுக்கும் இந்த 5 சதவீத மதிப்பெண் குறைப்பு அரசாணை பொருந்தும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.