மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண் குறைப்பு அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

மாற்றுத் திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பா.சந்தரமோகன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற பொதுப்பிரிவினா் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), பிசி, பிசி-முஸ்லிம், டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதமும் (150-க்கு 75), எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி வகுப்பினா் 40 சதவீதமும் (150-க்கு 60) மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த நிலையில், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருப்பதைப் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான டெட் தோ்ச்சி பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.

அந்தக் கருத்துருவை ஏற்று டெட் தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயித்து அரசு ஆணையிடுகிறது. இந்தப் புதிய தோ்ச்சி மதிப்பெண்ணை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடத்தப்பட்ட டெட் தோ்வுக்கும், கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட டெட் தோ்வு அறிவிப்புக்கும் பின்பற்ற அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.