ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.

News image

டெட் தேர்வு

Updated On :8 ஏப்ரல் 2026, 7:57 pm

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்.18-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான பணிச் சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 10) நிறைவு பெறவுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.