பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்.18-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான பணிச் சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 10) நிறைவு பெறவுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கும் கல்வித் துறை

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


