ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.

News image

டெட் தேர்வு

Updated On :9 ஏப்ரல் 2026, 1:27 am IST

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.10) கடைசி நாளாகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்.18-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான பணிச் சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 10) நிறைவு பெறவுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.